செய்திகள்

விஷம் குடித்து விவசாயி தற்கொலை

Published On 2019-04-09 18:28 GMT   |   Update On 2019-04-09 18:28 GMT
வலங்கைமான் அருகே வயிற்றுவலி காரணமாக விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
வலங்கைமான்:

வலங்கைமான் அருகே உள்ள கொட்டையூர் ஊராட்சி சர்வமானியம் பகுதியை சேர்ந்தவர் சங்கர் (வயது45). விவசாயி. இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் உள்ளது. இதனால் அடிக்கடி வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார். சம்பவத்தன்று வயிற்றுவலி அதிகமானதால் வீட்டில் இருந்த பூச்சிமருந்தை(விஷம்) குடித்தார்.

இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை உடனே தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சங்கர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வலங்கைமான் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாநிதி, சப்-இன்ஸ்பெக்டர் ஓவியா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News