செய்திகள்

திருச்சி அருகே நிதி நிறுவனத்தில் ரூ.1 லட்சம் கொள்ளை

Published On 2019-03-30 09:52 GMT   |   Update On 2019-03-30 09:52 GMT
திருச்சி அருகே நிதி நிறுவனத்தில் ரூ.1 லட்சம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

திருச்சி பெரியகடை வீதி ஜாபர்ஷா தெருவில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதனை ரெங்கநாதன் (56) என்பவர் நடத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கம்போல் பணி முடிந்ததும் நிறுவனத்தை பூட்டி சென்றார்.

இன்று காலை நிதி நிறுவனத்தை திறப்பதற்காக வந்துள்ளார். அப்போது பூட்டுகள் உடைக்கப்பட்டு கிடந்தது‌. இதனால் அதிர்ச்சி அடைந்த ரெங்கநாதன் நிதி நிறுவனத்தின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது லாக்கர் உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.1 லட்சம் பணம் மாயமாகியிருந்தது.

இது குறித்து உடனடியாக அவர் கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், திருட்டு சம்பவம் நடைபெற்ற நிதி நிறுவனத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News