செய்திகள்
கழுகுமலையில் தேள் கொட்டி மாணவன் பலி
கழுகுமலையில் விளையாடிக்கொண்டிருந்த மாணவனை தேள் கொட்டியது. அவனை ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தான்.
கழுகுமலை:
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே உள்ள வெற்றிலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துசெல்வம். இவரது மகன் மணிராஜ் (வயது11). இவன் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான்.
விடுமுறை தினமான நேற்று விளையாடிய போது தேள் போன்ற ஒரு பூச்சி கொட்டியதாக பெற்றோரிடம் கூறினான். உடனடியாக மணிராஜை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் நேற்று நள்ளிரவு மணிராஜ் பரிதாபமாக இறந்தான்.
இது குறித்து கழுகுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.