செய்திகள்

வடமதுரை அருகே வீட்டில் பதுக்கிய கள்ளத்துப்பாக்கி பறிமுதல்

Published On 2019-03-25 11:10 GMT   |   Update On 2019-03-25 11:10 GMT
வடமதுரை அருகே வீட்டில் கள்ளத்துப்பாக்கி பதுக்கிய விவசாயி கைது செய்யப்பட்டார்.

வடமதுரை:

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு உரிமம் பெற்று வைத்துள்ள துப்பாக்கிகளை அந்தந்த எல்லைக்குட்பட்ட போலீஸ் நிலையங்களில் ஒப்படைக்குமாறு தேர்தல் அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன்படி துப்பாக்கிகள் வைத்திருந்தவர்கள் அதனை ஒப்படைத்து வருகின்றனர்.

வடமதுரை அருகே விவசாயி ஒருவர் வீட்டில் கள்ளத்தனமாக துப்பாக்கி வைத்து பயன்படுத்தி வருவதாக வேடசந்தூர் டி.எஸ்.பி.க்கு தகவல் கிடைத்தது. அதன்படி டி.எஸ்.பி. ரவிக்குமார் உத்தரவின் பேரில் போலீசார் ரகசிய சோதனை நடத்தினர்.

நாடு கண்டனூரைச் சேர்ந்த முருகன் (41) என்பவர் கள்ளத்தனமாக வீட்டில் துப்பாக்கி வைத்து பயன்படுத்தி வந்தது தெரிய வந்தது. இவருக்கு திருமணம் ஆகி ராஜலெட்சுமி என்ற மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர். தனது விவசாய நிலத்தில் விலங்குகள் உள்ளே வராமல் இருப்பதற்காக நாட்டு துப்பாக்கியை பயன்படுத்தி வந்ததாக போலீசாரிடம் தெரிவித்தார். இருந்த போதும் கள்ளத்தனமாக துப்பாக்கி வைத்திருந்ததால் அதனை பறிமுதல் செய்த போலீசார் முருகனையும் கைது செய்தனர்.

Tags:    

Similar News