செய்திகள்

செங்குன்றம் அருகே பெண் தீக்குளித்து தற்கொலை - காப்பாற்ற சென்ற கணவர் காயம்

Published On 2019-03-20 11:00 GMT   |   Update On 2019-03-20 11:00 GMT
செங்குன்றம் அருகே குடும்ப பிரச்சனையின் காரணமாக பெண் தீக்குளித்து இறந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்குன்றம்:

சென்னை செங்குன்றத்தை அடுத்த எம்.ஏ. நகர் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் சுப்பையா (வயது 50) லாரி டிரைவர். இவரது மனைவி ஸ்டெல்லா இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

சுப்பையாவுக்கு குடிப்பழக்கம் உண்டு. தினமும் மது குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்வது வழக்கம். நேற்று இரவும் அவர் குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். இதனால் கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.

இதனால் மனம் உடைந்த ஸ்டெல்லா உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்தார். இதில் அவரது உடல் கருகியது. கணவர் சுப்பையா அவரை காப்பாற்ற முயன்றார். இதில் அவரும் தீக்காயம் அடைந்தார்.

இதில் சம்பவ இடத்திலேயே ஸ்டெல்லா இறந்தார். சுப்பையா தீக்காயத்துடன் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து செங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
Tags:    

Similar News