செய்திகள்
குன்னூரில் ராட்சத மரம் விழுந்து வீடு, மது பார் சேதம் - 2 பேர் உயிர் தப்பினார்கள்
குன்னூரில் இன்று காலை ரோடு ஓரம் இருந்த வீடு, அதன் பின்புறம் இருந்த மது பார் மீது ஒரு ராட்சத மரம் முறிந்து விழுந்ததில் 2 பேர் உயிர் தப்பினார்கள்.
குன்னூர்:
நீலகிரி மாவட்டம் குன்னூர்- கோத்தகிரி சாலையில் வண்டிச் சோலை உள்ளது.
இங்கு வனத்துறைக்கு சொந்தமான காடுகள் இருக்கிறது. இப்பகுதியில் சாலை ஓரங்களில் ராட்சத மரங்கள் ஏராளமாக இருக்கிறது.
இந்த நிலையில் இன்று காலை ஒரு ராட்சத மரம் முறிந்து விழுந்தது. இந்த மரம் ரோடு ஓரம் இருந்த வீடு, அதன் பின்புறம் இருந்த மது பார் மீதும் விழுந்தது.
இதில் வீடு மற்றும் மதுபார் சேதம் அடைந்தது. மது பாரில் இருந்த ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்தது. வீடு முன் கார் நிறுத்தப்பட்டு இருந்தது. இந்த காரும் சேதம் அடைந்தது.
மரம் விழுந்த போது மது பாரில் 2 பேர் இருந்தனர். அவர்கள் அதிர்ஷ்டவசமாக காயம் இன்றி தப்பினார்கள். #tamilnews
நீலகிரி மாவட்டம் குன்னூர்- கோத்தகிரி சாலையில் வண்டிச் சோலை உள்ளது.
இங்கு வனத்துறைக்கு சொந்தமான காடுகள் இருக்கிறது. இப்பகுதியில் சாலை ஓரங்களில் ராட்சத மரங்கள் ஏராளமாக இருக்கிறது.
இந்த நிலையில் இன்று காலை ஒரு ராட்சத மரம் முறிந்து விழுந்தது. இந்த மரம் ரோடு ஓரம் இருந்த வீடு, அதன் பின்புறம் இருந்த மது பார் மீதும் விழுந்தது.
இதில் வீடு மற்றும் மதுபார் சேதம் அடைந்தது. மது பாரில் இருந்த ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்தது. வீடு முன் கார் நிறுத்தப்பட்டு இருந்தது. இந்த காரும் சேதம் அடைந்தது.
மரம் விழுந்த போது மது பாரில் 2 பேர் இருந்தனர். அவர்கள் அதிர்ஷ்டவசமாக காயம் இன்றி தப்பினார்கள். #tamilnews