செய்திகள்

முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

Published On 2019-03-18 04:38 GMT   |   Update On 2019-03-18 04:38 GMT
முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #BombThreat #EdappadiPalaniswami
சென்னை:

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல் அமைச்சர் கே பழனிசாமி இல்லத்திற்கு இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. காலை 6.50 மணியளவில் காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட மர்ம நபர், வெடிகுண்டு மிரட்டலை விடுத்தார்.



இதையடுத்து, வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் முதல்வர் இல்லத்திற்கு வந்து சோதனை நடத்தினர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. இந்த சோதனையின்போது சந்தேகப்படும்படியான எந்த பொருளும் கண்டறியப்படவில்லை. எனவே, வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது. இதையடுத்து, தொலைபேசியில் மிரட்டல் விடுத்த நபரை கண்டறிய போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். #BombThreat #EdappadiPalaniswami
Tags:    

Similar News