செய்திகள்
அதிமுகவில் மீண்டும் கே.சி.பழனிசாமி- ஓபிஎஸ், இபிஎஸ் முன்னிலையில் இணைந்தார்
அதிமுகவில் இருந்து கடந்த ஆண்டு நீக்கப்பட்ட கே.சி.பழனிசாமி மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டார். #KCPalanisamy #ADMK
சென்னை:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவு அளிப்போம் என்று அ.தி.மு.கவின் முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமி கூறியதால், அவர் கடந்த ஆண்டு மார்ச் 16-ம் தேதி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
அதிமுக அணிகள் இணைப்புக்குப் பிறகு, கட்சி விதிகளில் மாற்றம் செய்யப்பட்டு, புதிய பதவிகள் உருவாக்கப்பட்டதை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் கே.சி.பழனிசாமி வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது. #KCPalanisamy #ADMK
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவு அளிப்போம் என்று அ.தி.மு.கவின் முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமி கூறியதால், அவர் கடந்த ஆண்டு மார்ச் 16-ம் தேதி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்நிலையில், கே.சி.பழனிசாமி மீண்டும் அதிமுகவில் சேர்க்கப்பட்டுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலையில், கே.சி.பழனிசாமி இன்று அதிமுகவில் இணைந்தார்.
அதிமுக அணிகள் இணைப்புக்குப் பிறகு, கட்சி விதிகளில் மாற்றம் செய்யப்பட்டு, புதிய பதவிகள் உருவாக்கப்பட்டதை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் கே.சி.பழனிசாமி வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது. #KCPalanisamy #ADMK