செய்திகள்

திருக்கோவிலூர் அருகே லாரி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2019-03-06 16:40 GMT   |   Update On 2019-03-06 16:40 GMT
கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக் லாரி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருக்கோவிலூர்:

திருக்கோவிலூரை அடுத்துள்ள கண்டாச்சிபுரம் புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 50).இவர் சென்னையில் உள்ள ஒரு லாரி கம்பெனியில் டிரைவராக வேலை பார்த்து வருகின்றார். இவர் குடும்பத்தை சரிவர கவனிக்காமல் இருந்தார்.

இதனால் கணவன்-மனைவிக்கு இடையே பிரச்சினை தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த ஜெயராமன் அருகில் உள்ள பில்ராம்பட்டு கிராமத்துக்கு சென்று அங்குள்ள ஒரு மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைக்கண்ட அக்கம், பக்கத்தினர் அவரது வீட்டிற்கு தகவல் தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து ஜெயராமன் மனைவி மலர்கொடி கொடுத்த புகாரின்பேரில் அரகண்டநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் திருமால் ஆகியோர் விரைந்து சென்று விசாரனை நடத்தினர். #tamilnews
Tags:    

Similar News