செய்திகள்
கரூர் அருகே மாட்டு வண்டி-மோட்டார் சைக்கிள் மோதல்: வாலிபர் பலி
கரூர் அருகே மாட்டு வண்டி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கரூர்:
கரூர் அருகே நெரூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வசந்தகுமார் (வயது 33). இவர் நெரூர் பஸ்நிறுத்தம் அருகே தனது மோட்டார் சைக்கிளிலில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மாட்டு வண்டி எதிர்பாரத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் வசந்தகுமார் படுகாயம் அடைந்தார். உடனே அக்கம் பக்கதினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து வாங்கல் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.