செய்திகள்

அனுப்பானடி பகுதியில் நாளை மின் நிறுத்தம்

Published On 2019-02-25 08:53 GMT   |   Update On 2019-02-25 08:53 GMT
அனுப்பானடி, தெப்பக்குளம் பகுதியில் நாளை (செவ்வாய்கிழமை) மின் சப்ளை நிறுத்தப்படுகிறது.

மதுரை:

மதுரை தெற்கு மெட்ரோ மின் வினியோக செயற்பொறியாளர் ராஜாகாந்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அனுப்பானடி மற்றும் தெப்பக்குளம் துணை மின் நிலையங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.

எனவே அந்த நேரத்தில் ராஜூவ் நகர், பகலவன் நகர், தமிழன் தெரு, ஆசிரியர் காலனி, அரவிந்த் மருத்துவமனை, சினிப்பிரியா தியேட்டர், ஆவின் பால்பண்ணை, விரகனூர், ஐராவதநல்லூர், பாபு நகர், கணேஷ் நகர், கல்லம்பல், சிலைமான், புளியங்குளம், கீழடி, சிந்தாமணி, அய்யனார்புரம், பனையூர், சாமநத்தம், பெரியார் நகர், தாய்நகர், கங்கா நகர், ஹவுசிங்போர்டு, கண்ணன் காலனி, அழகாபுரி, ராஜமான் நகர் பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.

இதேபோல் தெப்பக்குளம் தெற்கு, அடைக்கலம் பிள்ளை காலனி, புது ராமநாதபுரம் ரோடு, தெப்பக்குளம் மேற்கு, பங்கஜம் காலனி, அனுப்பானடி, தெப்பம்ரோடு, அனுப்பானடி கிழக்கு, மேற்கு பகுதிகள், காமராஜர் சாலை, தெப்பக்குளம் முதல் கிழக்கு வாயில் வரை, தங்கம் நகர், வடிவேல் நகர், மைனர் ஜெயில் பகுதிகள், அழகர் நகர், குருவிக்காரன் சாலை, ஏ.பி.டி. சந்து, மீனாட்சி நகர், புது மீனாட்சி நகர், சி.எம்.ஆர். ரோடு, கொண்டிதொழு, சீனிவாசபெருமாள் கோவில் தொரு, சின்னகண்மாய், பாலரெங்கபுரம், சண்முக நகர்,

நவரத்தினபுரம், பிஸசர்ரோடு, இந்திராநகர், பழையகுயவர் பாளையம் ரோடு, லெட்சுமிபுரம் 1 முதல் 6 வரை, கான்பாளையம் 1 முதல் 2 வரை, பச்சரிசிகாரத் தோப்பு முழுவதும், மைனா தெப்பம் 1 முதல் 3 வரை, கிருஷ்ணாபுரம் பகுதி முழுவதும், ராஜிவ் காந்தி தெரு, மேல அனுப்பானடி, கிழக்குபகுதி, தமிழன் தெரு, என்.எம்.ஆர்.புரம், ஏ.ஏ.ரோடு, பி.பி. ரோடு, டி.டி.ரோடு, மீனாட்சி அவென்யூ, திருமகள் நகர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் தடைபடும்.

மேற்கண்டவாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News