செய்திகள்
பேட்டையில் கல்லூரி மாணவி திடீர் மாயம்
பேட்டையில் கல்லூரி மாணவி திடீரென மாயமானது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நெல்லை:
பேட்டை அனவரத வெற்றி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கட சுப்பிரமணியன். அரசு பஸ் டிரைவர். இவரது மகள் வேலம்மாள் என்ற சீதா(வயது21). இவர் பேட்டையில் உள்ள கல்லூரியில் பட்டப்படிப்பு இறுதியாண்டு படித்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டைவிட்டு சென்ற வேலம்மாளை காணவில்லை.
அக்கம் பக்கத்தில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுபற்றி பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து மாணவி வேலம்மாள் எங்கு சென்றார்? அவரை யாரும் கடத்தி சென்றார்களா? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.