செய்திகள்

கைகோர்த்து நிற்கும் சுயநலவாதிகளை தேர்தலில் வீழ்த்துவோம் - தினகரன்

Published On 2019-02-23 06:49 GMT   |   Update On 2019-02-23 06:49 GMT
கைகோர்த்து நிற்கும் சுயநலவாதிகளை தேர்தலில் வீழ்த்துவோம் என்று அமமுக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #TTVDhinakaran

சென்னை:

அ.ம.மு.க. துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தீய சக்திகளின் கோரப்பிடியிலிருந்து தமிழத்தை காத்து நின்று, மாநிலத்தின் முதல்வராக ஏழைகளின் நலனையும் தமிழகத்தின் நல்வாழ்வையும், திராவிட இயக்கத்தின் அடிநாதமான சமூக நீதிக் கொள்கையையும் காப்பாற்றியதோடு, உலகத் தலைவர்கள் வியந்த தலைவராக, பேராளுமையாக, சாதனைகளின் சிகரமாகத் திகழ்ந்தவர் நம் அம்மா. பாராளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக அ.தி.மு.க.வை அமர வைத்து வரலாற்றுச் சாதனை புரிந்தவர்.

மத்திய அரசின் பல்வேறு தமிழக விரோத திட்டங்களை அம்மா அனுமதிக்க மறுத்ததற்கு அத்திட்டங்கள் தமிழக மக்களின் நல்வாழ்வை நாசமாக்கும். தமிழகத்தை உருக்குலைத்து விடும். டெல்லிக்கு மட்டுமே பலனே தவிர, தமிழகத்திற்கு பலன் ஏதும் இல்லை என்ற காரணத்தினால்தான்.

அம்மா எதிர்த்த மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் சுதந்திரமாக நுழைந்து தமிழகத்தை சூறையாடிக் கொண்டிருக்கின்றன. கடுமையாக பாதிக்கப்பட்டு போராடி வரும் மக்களுக்கு ஆறுதலாகவும், அருமருந்தாகவும் இருப்பது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்.

நயவஞ்சகம் கொண்டோருக்கும், துரோகம் புரிந்தோருக்கும், தீய சக்திகளுக்கும் நாம் முடிவுரை தீட்டிடுவோம்.

புரட்சித்தலைவி அம்மாவின் பிறந்தநாளில் அவர் கொண்ட கொள்கைகளையும் கண்ட கனவுகளையும் நிறைவேற்றிட வீர சபதம் ஏற்போம். கைகோர்த்து நிற்கும் சுயநலவாதிகளை, தேர்தல் களத்தில் எதிர் கொண்டு வீழ்த்துவோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். #TTVDhinakaran

Tags:    

Similar News