செய்திகள்

திருமணமாகாத ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை

Published On 2019-02-21 12:19 GMT   |   Update On 2019-02-21 12:19 GMT
நரசிம்மநாயக்கன்பாளையத்தில் திருமணமாகாத ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கவுண்டம்பாளையம்:

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் டேங் வீதியை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மகன் செந்தில்குமார் (வயது 31). வெல்டர். இவர் திருமணமாகாத ஏக்கத்தில் இருந்தார். அவரது தாய் விசாலாட்சி மகனுக்கு ஆறுதல் கூறி நம்பிகை வார்த்தை பேசி வந்தார்.

இந்நிலையில் அவரது தாய் தவறி விழுந்து காயம் அடைந்தார். இனிமேல் தனக்கு திருமணம் செய்து வைக்க யாரும் இல்லை என்று விரக்தியடைந்த செந்தில்குமார் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதே போன்று பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள நாயக்கனூர் விஷ்ணு நகரை சேர்ந்த தொழிலாளி பாலமுருகன் (45). இவர் குடும்ப பிரச்சினையால் வி‌ஷம் குடித்தார். அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முருகேசன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
Tags:    

Similar News