செய்திகள்
மதுரையில் 3½ கிலோ கஞ்சா பறிமுதல் - 3 பேர் கைது
மதுரையில் கஞ்சா விற்றதாக 3 பேரை கைது செய்த போலீசார் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.
மதுரை:
மதுரை காளவாசல் பாண்டியன் நகர் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக கரிமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரியம்மாளுக்கு தகவல் கிடைத்தது. அவர் போலீசாருடன் சென்று அதிரடியாக சோதனை நடத்தினார்.
அப்போது கஞ்சா விற்றதாக ஆரப்பாளையம் கோபாலன் தெருவைச் சேர்ந்த தெய்வேந்திரன் (வயது38), பைக்காரா மகாலிங்கம் (47) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து 3½ கிலோ கஞ்சா, ரூ.600 மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல் கூடல்புதூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காசி மற்றும் போலீசார் ரோந்து சென்றபோது கஞ்சா விற்றதாக ஆனையூர் முருகன் (59) கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்த 250 கிராம் கஞ்சா, ரூ.270 மற்றும் மொபட் பறிமுதல் செய்யப்பட்டது.
மதுரை காளவாசல் பாண்டியன் நகர் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக கரிமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரியம்மாளுக்கு தகவல் கிடைத்தது. அவர் போலீசாருடன் சென்று அதிரடியாக சோதனை நடத்தினார்.
அப்போது கஞ்சா விற்றதாக ஆரப்பாளையம் கோபாலன் தெருவைச் சேர்ந்த தெய்வேந்திரன் (வயது38), பைக்காரா மகாலிங்கம் (47) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து 3½ கிலோ கஞ்சா, ரூ.600 மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல் கூடல்புதூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காசி மற்றும் போலீசார் ரோந்து சென்றபோது கஞ்சா விற்றதாக ஆனையூர் முருகன் (59) கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்த 250 கிராம் கஞ்சா, ரூ.270 மற்றும் மொபட் பறிமுதல் செய்யப்பட்டது.