செய்திகள்

சங்கரன்கோவில் அருகே தொழிலாளி தற்கொலை

Published On 2019-02-16 11:22 GMT   |   Update On 2019-02-16 11:22 GMT
சங்கரன்கோவில் அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அருகே உள்ள ஊத்தான்குளத்தை சேர்ந்தவர் சாய்ராம் (வயது 42). இவரது மனைவி லெட்சுமி (30). இவர்களுக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

சாய்ராம் பல ஆண்டுகளாக தீராத நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். பல இடங்களில் மருத்துவம் பார்த்தும் குணமாகவில்லையாம். இதனால் வாழ்க்கையில் மிகவும் விரக்தி அடைந்த சாய்ராம் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத போது பேனில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து லெட்சுமி அளித்த புகாரின் பேரில் சின்னகோவிலான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News