செய்திகள்

நாமக்கல் போலீஸ் நிலையத்தில் 2 வாக்கி டாக்கிகள் மாயம்

Published On 2019-02-07 11:18 GMT   |   Update On 2019-02-07 11:18 GMT
நாமக்கல் போலீஸ் நிலையத்தில் 2 வாக்கி டாக்கிகள் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல்:

போலீஸ் துறையில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர், சிறப்பு இன்ஸ்பெக்டர் மற்றும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் தகவல் பரிமாற்றத்துக்காக வாக்கி டாக்கி பயன்படுத்தி வருகின்றனர்.

நாமக்கல் போலீஸ் நிலையத்தில் சுமார் 10 வாக்கி டாக்கிகள் உள்ளன. இந்த வாக்கி டாக்கிகள் இன்ஸ்பெக்டர் பொறுப்பில் பராமரிப்பில் இருக்கும்.

இந்த நிலையில் நாமக்கல் போலீஸ் நிலையத்தில் 2 வாக்கி டாக்கிகள் திடீரென மாயமாகிவிட்டன. இதனால் இன்ஸ்பெக்டர் மற்றும் காவலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வாக்கி டாக்கிகளை திருடிச் சென்றது யார் என்பது மர்மமாக உள்ளது. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றன.

இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு கூறும்போது, போலீஸ் நிலையத்தில் 2 வாக்கி டாக்கிகள் காணாமல் போய் உள்ளன. இவை சர்வீஸ் செய்ய அனுப்பப்பட்டுள்ளதா? அல்லது வேறு போலீஸ் ஸ்டேசன்களில் மாறி சென்றுள்ளதா? என விசாரணை செய்யப்பட்டு வருகிறது என்றார்.

இச்சம்பவம் நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
Tags:    

Similar News