செய்திகள்

வியாபாரி மீது சரமாரி தாக்குதல் - 3 வாலிபர்களுக்கு வலைவீச்சு

Published On 2019-02-06 12:33 GMT   |   Update On 2019-02-06 12:33 GMT
புதுவையில் வியாபாரி மீது தாக்குதல் நடத்திய 3 வாலிபர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள்.
புதுச்சேரி:

புதுவையை அடுத்த தமிழக பகுதியான கோட்டக்குப்பம் பர்கத் நகரை சேர்ந்தவர் வதூத் ரகுமான் (வயது 44).

இவர், புதுவை சண்டே மர்க்கெட்டில் துணி வியாபாரம் செய்து வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை கடை போடுவதற்காக வேனில் துணிமணிகளை ஏற்றிக்கொண்டு காந்தி வீதிக்கு வந்தார்.

அவர் வழக்கமாக கடை போடும் இடமான காந்தி வீதி- நீடராஜப்பர் வீதிசந்திப்பில் கடை அமைத்து வியாபாரம் செய்து வந்தார்.

இரவு வியாபாரம் முடிந்து 11.30 மணியளவில் துணிமணிகளை வேனில் ஏற்றிக் கொண்டு புறப்பட தயாரானார்.

அப்போது 2 மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் வந்தனர். அதில் ஒரு மோட் டார் சைக்கிளில் வந்த வாலிபர் சிறிது தூரத்தில் நின்று விட்டார். மற்ற 2 வாலிபர்களும் பர்கத் ரகுமானிடம் வந்தனர். அவர்கள் திடீரென ரகுமா னிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதில் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர்கள் ரகுமானை தகாத வார்த்தைகளால் திட்டி கையால் தாக்கினர். இதனால் பர்கத் ரகுமான் அங்கிருந்து தப்பி ஓடினார்.

ஆனால், சிறிது தூரத்தில் நின்று கொண்டிருந்த மற்றொரு வாலிபர் அவரை வழிமறித்தார். பின்னர் அவர்கள் சுற்றி வளைத்து மோட்டார் சைக் கிள் சாவியால் அவரது முகத்தில் குத்தி விட்டு அந்த வாலிபர்கள் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர். காயம் அடைந்த பர்கத் ரகுமான் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

இதுகுறித்த புகாரின் பேரில் பெரியகடை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
Tags:    

Similar News