செய்திகள்

ஊத்துமலை அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

Published On 2019-02-01 16:31 GMT   |   Update On 2019-02-01 16:31 GMT
ஊத்துமலை அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை:

ஊத்துமலை அருகே உள்ள முத்தம்மாள்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கரசெல்வம். கூலித்தொழிலாளி. இவருக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டதாம். இதனால் மனம் உடைந்து விஷம் குடித்தார். 

உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் நேற்று இரவு அவர் பரிதாபமாக இறந்தார். 

இது குறித்து ஊத்துமலை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News