செய்திகள்

காதல் திருமணம் செய்த புதுப்பெண் தற்கொலை

Published On 2019-01-28 17:41 GMT   |   Update On 2019-01-28 17:41 GMT
காதல் திருமணம் செய்த புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.
கரூர்:

கரூர் அருகே உள்ள ரெங்கநாதன் பேட்டையை சேர்ந்தவர் தீனதயாளன் (வயது 30). சேலம் ஆத்தூரை சேர்ந்தவர் புவனேசுவரி (25). இவர்கள் இருவரும் காதலித்து கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். கரூர் பதிவாளர் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக தீனதயாளன் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதனால் மன வேதனையடைந்த புவனேசுவரி வீட்டின் ஒரு அறையில் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த வாங்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் புவனேசுவரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில், வாங்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரகுபதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்தி வருகிறார். புவனேசுவரிக்கு திருமணமாகி 4 மாதங்களில் தற்கொலை செய்து கொண்டதால், கரூர் வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி விசாரணை நடத்தி வருகிறார். புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
Tags:    

Similar News