செய்திகள்

திண்டுக்கல் அருகே மில் தொழிலாளி அடித்து கொலை?

Published On 2019-01-27 11:58 GMT   |   Update On 2019-01-27 11:58 GMT
திண்டுக்கல் அருகே கடவூர் செல்லும் பிரிவில் மில் தொழிலாளி பிணமாக கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வடமதுரை:

திண்டுக்கல் அருகே வடமதுரை போலீஸ் சரகம் ஸ்ரீரங்க வுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் அலெக்ஸ்பாண்டி(வயது32). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு மில்லில் வேலைபார்த்து வந்தார். அவரது மனைவி தேவி. இவர்களுக்கு மகன் மணி, மகள் பிருந்தியா ஆகியோர் உள்ளனர்.

மில் வேலைக்கு செல்லும் அலெக்ஸ்பாண்டி தினந்தோறும் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்புவது வழக்கம். நேற்று மாலை வழக்கம்போல் வேலைக்கு அலெக்ஸ்பாண்டி சென்றார். இன்றுஅதிகாலை வீட்டுக்கு வரவேண்டும். ஆனால் அவர் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் செல்போனில் தொடர்பு கொண்டனர்.

ஆனால் செல்போன் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டிருந்தது. இதற்கிடையில் கடவூர் செல்லும் பிரிவில் அலெக்ஸ்பாண்டி பிணமாக கிடப்பதாக உறவினர்களுக்கு தகவல் எட்டியது. அதிர்ச்சியடைந்த அவரது மனைவி தேவி மற்றும் குடும்பத்தினர் அங்கு விரைந்தனர்.

பிணமாக கிடந்த அலெக்ஸ் பாண்டி உடலைபார்த்து கதறி துடித்தனர். இந்த தகவல் வடமதுரை போலீசாருக்கு எட்டியது. தகவல் அறிந்த சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையிலான போலீசார் விரைந்தனர்.

உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அலெக்ஸ்பாண்டி உடலில் ரத்தகாயங்கள் இருந்தது. எனவே அவர் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. எனினும் அவர் எப்படி இறந்தார்?. அதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News