செய்திகள்

ஆலங்குளம் அருகே தனியார் மருத்துவமனை பெண் ஊழியர் திடீர் மாயம்

Published On 2019-01-24 12:50 GMT   |   Update On 2019-01-24 12:50 GMT
ஆலங்குளம் அருகே கல்லூரியில் சான்றிதழ் வாங்க சென்ற தனியார் மருத்துவமனை பெண் ஊழியர் திடீரென மாயமானார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆலங்குளம்:

ஆலங்குளம் அருகே உள்ள அகரத்தை சேர்ந்தவர் உலகு. இவரது மகள் முத்துலட்சுமி (வயது23). இவர் கோவையில் தனியார் கண் மருத்துவமனையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். பொங்கல் விடுமுறையில் ஊருக்கு வந்த இவர் கல்லூரியில் சான்றிதழ் வாங்க போவதாக கூறி சென்றார். 

அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. அக்கம் பக்கத்தில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுபற்றி ஆலங்குளம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து முத்துலட்சுமி எங்கு சென்றார்? என்ன ஆனார்? அவரை யாரும் கடத்தி சென்றார்களா? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள். 
Tags:    

Similar News