செய்திகள்

சத்திரப்பட்டி அருகே தொழிலாளி வீட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை

Published On 2019-01-24 10:21 GMT   |   Update On 2019-01-24 10:21 GMT
சத்திரப்பட்டி அருகே தொழிலாளி வீட்டை உடைத்து நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சத்திரப்பட்டி:

திண்டுக்கல் மாவட்டம் சத்திரப்பட்டி அருகே உள்ள தேவத்தூர் மேற்கு தெருவைச் சேர்ந்தவர் நாட்ராயன். கூலி தொழிலாளி. அவரது மனைவி குப்பாத்தாள் . இவர்கள் வீட்டை பூட்டிவிட்டு கூலி வேலைக்காக வெளியில் சென்றுவிட்டனர்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்ம நபர்கள் வீட்டின் காம்பவுண்ட் சுவற்றில் ஏறி குதித்தனர். பூட்டியிருந்த பூட்டை உடைத்து, வீட்டிற்குள் நுழைந்தனர். பின்னர் பீரோவில் வைத்திருந்த 4 பவுன் தங்க நகை, ரூ.70 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.

மாலை வீட்டிற்கு வந்த குப்பாத்தாள் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது நகை- பணம் மாயமானது கண்டு பதறினார்.

இதுகுறித்து உடனே அம்பிளிக்கை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் அம்பிளிக்கை சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News