செய்திகள்

திருப்பூரில் காதலன் இறந்த துக்கத்தில் கல்லூரி மாணவி தற்கொலை

Published On 2019-01-21 12:22 GMT   |   Update On 2019-01-21 12:22 GMT
திருப்பூரில் காதலன் இறந்த துக்கத்தில் கல்லூரி மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருப்பூர்:

திருப்பூர் அருகே உள்ள கருவம்பாளையத்தை சேர்ந்தவர் பிரியதர்ஷினி (வயது 20). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் லேப் டெக்னீசியன் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த பிரியதர்ஷினி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து திருப்பூர் மத்திய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட பிரிய தர்ஷினியின் உடலை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரியதர்ஷினி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து நடத்திய விசாரணையில் பிரியதர்ஷினியின் சொந்த ஊர் திண்டுக்கல் அவர் அங்கு படிக்கும் போது ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 2 பேரும் கடந்த 5 வருடங்களுக்கு மேலான காதலித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த வாரம் திடீரென அந்த வாலிபர் இறந்து விட்டார். இதனால் பிரியதர்ஷினி கடந்த சில நாட்களாக மனவேதனை அடைந்து காணப்பட்டார்.

சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த அவர் காதலன் இறந்த துக்கத்தில் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

Tags:    

Similar News