செய்திகள்

பொன்னேரியில் மணப்பெண் திடீர் மாயம்

Published On 2019-01-19 05:55 GMT   |   Update On 2019-01-19 05:55 GMT
பொன்னேரியில் மணப்பெண் திடீர் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொன்னேரி:

பொன்னேரியை அடுத்த கள்ளூர் புதுகுப்பம் சின்னம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பவுத்ரா (23). இவர் ஆந்திரா தடா அருகில் உள்ள செல்போன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

இவருக்கும், உறவினர் ஒருவருக்கும் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது. அதன்படி நேற்று திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் திருமணம் நடக்க இருந்தது. இந்த நிலையில் பவுத்ராவின் பெற்றோர்கள் சென்னைக்கு துணி மற்றும் பொருட்கள் வாங்க சென்றனர். திரும்பி வந்து பார்த்த போது வீட்டில் பவுத்ராவை காணவில்லை.

இது குறித்து திருப்பாலை வனம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர். மணப்பெண் காணாமல் போனதால் இரு வீட்டாரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Tags:    

Similar News