செய்திகள்

செய்யாறு அருகே தொழிலாளி வி‌ஷம் குடித்து தற்கொலை

Published On 2019-01-17 10:14 GMT   |   Update On 2019-01-17 10:14 GMT
செய்யாறு அருகே உடல்நிலை பாதிப்பால் மனமுடைந்த தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
செய்யாறு:

செய்யாறு அருகே உள்ள கீழ்மட்டை பகுதியை சேர்ந்தவர் முனுசாமி (வயது 50) கூலிதொழிலாளி. இவரது மனைவி மஞ்சுளா. முனுசாமிக்கு கடந்த 2 ஆண்டுகளாக உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல்வேறு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் உடல்நிலை சரியாகவில்லை. இதனால் மனமுடைந்த அவர் சம்பவத்தன்று வி‌ஷம்குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

மயக்க நிலையில் கிடந்த முனுசாமியை மீட்ட உறவினர்கள் செய்யாறு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு முனுசாமி சிகிச்சை பலனின்றி நேற்றிரவு இறந்தார். இது குறித்து செய்யாறு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News