செய்திகள்

துப்பாக்கியால் மர்மகும்பல் சுட்ட சம்பவம் - மாட்டு வண்டி தொழிலாளர்களிடம் போலீசார் விசாரணை

Published On 2019-01-02 17:47 GMT   |   Update On 2019-01-02 17:47 GMT
விழுப்புரம் கெடார் அருகே வீரமுர் ஏரியில் மணல் அள்ளிய மாட்டு வண்டி தொழிலாளர்கள் மீது துப்பாக்கிக் சூடு நடத்தப்பட்டது தொடர்பாக மாட்டு வண்டி தொழிலாளர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
விழுப்புரம்:

விழுப்புரம் அருகே உள்ள வீரமூர் ஏரிக்கு கடந்த 30-ந் தேதி அதிகாலை மண் அள்ளுவதற்காக மாட்டு வண்டிகளில் சென்ற தொழிலாளர்களை நோக்கி மர்ம கும்பல் துப்பாக்கியால் சுட்டுவிட்டு, தப்பிச்சென்றனர். இதில் ஒரு மாட்டின் வாய் பகுதியில் குண்டு பாய்ந்ததில் நாக்கு துண்டானது. மேலும் மாட்டு வண்டிகளில் குண்டு பாய்ந்து துளை ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். ஏரியில் மண் அள்ளுவதில் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பான முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்ததா? என்று கெடார் மற்றும் கீழ்வாலை பகுதியை சேர்ந்த மாட்டு வண்டி தொழிலாளர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதுமட்டுமின்றி சம்பவம் நடந்ததற்கு 2, 3 நாட்களுக்கு முன்பாக அப்பகுதியில் சந்தேக நபர்களின் நடமாட்டம் இருந்ததா? என்பது குறித்து கிராம மக்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News