செய்திகள்
நெல்லை டீக்கடையில் எவர்சில்வர் பாத்திரத்தில் பார்சல் டீ

நெல்லையில் எவர்சில்வர் பாத்திரத்தில் பார்சல் டீ

Published On 2019-01-02 09:52 GMT   |   Update On 2019-01-02 09:52 GMT
நெல்லையில் உள்ள டீ கடையில் டீ பார்சல் வழங்க ‘எவர்சில்வர்’ தூக்கு பாத்திரம் வழங்கப்படுகிறது. அடையாளம் தெரியாதவர்கள் பார்சல் டீ கேட்டால், முன் பணம் ரூ.200 கட்டி எவர்சில்வர் பாத்திரத்தை வாங்கி செல்ல வேண்டும். #Plasticban
நெல்லை:

பிளாஸ்டிக் தடை காரணமாக நெல்லையில் பிளாஸ்டிக்குக்கு மாற்று பொருட்கள் உபயோகம் நடைமுறைக்கு வந்தது.

நெல்லையில் டவுன் உள்ளிட்ட சில பகுதிகளில் உள்ள சுவீட்ஸ் கடைகளில் அல்வா மற்றும் ஜிலேபி, இனிப்புகள் அனைத்தும் பனை ஓலை பெட்டியில் வழங்கப்படுகிறது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது. பெரும்பாலான புரோட்டா கடையில் வாழை இலையில் பார்சல் செய்யப்பட்டு எவர்சில்வர் பேப்பரில் சால்னா வழங்கப்படுகிறது.

பாளை வண்ணார்பேட்டையில் உள்ள டீ கடையில் டீ பார்சல் வழங்க ‘எவர்சில்வர்’ தூக்கு பாத்திரம் வழங்கப்படுகிறது.

அடையாளம் தெரியாதவர்கள் பார்சல் டீ கேட்டால், முன் பணம் ரூ.200 கட்டி எவர்சில்வர் பாத்திரத்தை வாங்கி செல்ல வேண்டும். பாத்திரத்தை திருப்பி கொடுத்ததும் முன்பணம் ரூ.200 திருப்பிக்கொடுக்கப்படுகிறது.

கடைகளில் பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்கள் துணிப்பை கொண்டு செல்லாவிட்டால், கடைகளிலேயே துணிப்பை ரூ.5, ரூ.10 என்று இரண்டு வகைகளாக வழங்கப்படுகிறது.

ஆனாலும் சில கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கலந்து செய்யப்படும் பைகளை தொடர்ந்து உபயோகப்படுத்தி வருகிறார்கள். #Plasticban

Tags:    

Similar News