செய்திகள்

தருமபுரி அருகே ஆசைக்கு இணங்குமாறு பள்ளி மாணவியை மிரட்டிய வாலிபர் கைது

Published On 2018-12-26 09:27 GMT   |   Update On 2018-12-26 09:27 GMT
தருமபுரி அருகே குளிப்பதை படம் பிடித்து ஆசைக்கு இணங்குமாறு பள்ளி மாணவியை மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தருமபுரி:

தருமபுரி மாவட்டம் ஏ.பாப்பாரப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மகன் பெரியசாமி (வயது 28). இவர் டிரைவராக பணியாற்றி வருகிறார்.

ஓஜிபள்ளி பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஏ.பாப்பாரப்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த மாணவி பள்ளிக் கூடத்திற்கு வரும்போது பெரியசாமி வழிமறித்து சில்மி‌ஷத்தில் ஈடுபட்டுள்ளார்.

சம்பவத்தன்று அந்த மாணவியிடம் அவர் சிறுமி குளிப்பதை ஆபாசமாக படம் பிடித்து வைத்திருப்பதாகவும், ஆசை இணங்க வேண்டும் என்றும், மறுத்தால் மாணவி குளிக்கும் வீடியோவை அவர் வெளியிட்டு விடுவதாகவும் மிரட்டினார்.

இதனால் அந்த மாணவி கதறி அழுதபடியே வீட்டிற்கு சென்று நடந்த சம்பவத்தை பற்றி பெற்றோரிடம் கூறினார்.

இதுகுறித்து உடனே மாணவியின் பெற்றோர் பாப்பாரப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். புகாரின்பேரில் போலீசார் பெரியசாமி மீது போக்சோ சட்டத்தின் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
Tags:    

Similar News