செய்திகள்

கிறிஸ்துமஸ் பிரார்த்தனைக்கு சென்றிருந்தபோது வியாபாரி வீட்டில் 28 பவுன் கொள்ளை

Published On 2018-12-25 11:59 GMT   |   Update On 2018-12-25 11:59 GMT
மதுரை அருகே கிறிஸ்துமஸ் பிரார்த்தனைக்கு சென்றிருந்தபோது வியாபாரி வீட்டில் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வரு கின்றனர்.
புதூர்:

மதுரை உத்தங்குடி அருகில் உள்ள அமச்சியாபுரத்தை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 43). இரும்பு கடை வைத்துள்ள இவர் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நேற்று இரவு அருகில் உள்ள தேவாலயத்துக்கு குடும்பத்தினருடன் சென்று விட்டார்.

இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவில் இருந்த 28 பவுன் நகையை திருடிக்கொண்டு தப்பினர்.

பிரார்த்தனை முடிந்து வீடுதிரும்பிய ஆனந்தன் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது நகை கொள்ளை போய் இருந்தது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம் வழக்குப்பதிவு செய்து நகை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News