செய்திகள்

போடி அருகே வீடு புகுந்து பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றவர் கைது

Published On 2018-12-20 12:25 GMT   |   Update On 2018-12-20 12:25 GMT
போடி அருகே வீடு புகுந்து பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.

மேலசொக்கநாதபுரம்:

போடி மீனாட்சிபுரம் காந்தி மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சின்னச்சாமி. இவரது மனைவி பாண்டீஸ்வரி (வயது 30). இவர்களது வீட்டுக்கு அருகில் வசிக்கும் மகேந்திரன் (32) என்பவர் அடிக்கடி பாண்டீஸ்வரிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். மேலும் அவர் தனியாக இருக்கும் சமயத்தில் தனது ஆசைக்கு இணங்கும்படியும் வற்புறுத்தி வந்துள்ளார்.

சம்பவத்தன்று வீட்டில் பாண்டீஸ்வரி தனியாக இருந்ததை அறிந்து மகேந்திரன் உள்ளே புகுந்தார். அப்போது பலவந்தமாக கற்பழிக்க முயன்றார். பாண்டீஸ்வரி கூச்சல் போடவே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஒன்று கூடினர்.

இதனால் ஆத்திர மடைந்த மகேந்திரன் பாண்டீஸ்வரியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து விட்டு சென்றார். இது குறித்து போடி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மகேந்திரனை கைது செய்தனர்.

Tags:    

Similar News