செய்திகள்

கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரியில் செவிலியர்கள் மீது தாக்குதல் - போலீசார் விசாரணை

Published On 2018-12-20 12:10 GMT   |   Update On 2018-12-20 12:10 GMT
கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் மது போதையில் இருந்த வாலிபர் மருத்துவ கருவிகளை உடைத்து, செவிலியர்கள் மீது தாக்குதல் நடத்தியது குறித்து அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
கொடைக்கானல்:

கொடைக்கானல் பில்லீஸ்வில்லா தெருவை சேர்ந்த வடிவேல் (27) என்பவர் கழிவறைக்கு பயன்படுத்தப்படும் சோப்பாயிலை குடித்ததால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்துள்ளார்.

அப்போது அவர் மதுபோதையிலும் இருந்துள்ளார். இதற்கு செவிலியர்கள் சிகிச்சையளிக்க முற்படும்போது வடிவேல் அவர்களின் சிகிச்சைக்கு ஒத்துழைக்காமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

சற்று நேரத்தில் போதை தலைக்கேறிய அவர் மருத்துவமனையில் இருந்த சிகிச்சையளிக்கும் கருவிகளை அங்கிருந்த சுத்தியலை எடுத்து உடைத்து நொறுக்கியுள்ளார். அதோடு பணியில் இருந்து செவிலியர்களையும் தாக்கினார். இதனால் பதற்றமடைந்த செவிலியர்கள் செய்வதறியாது திகைத்து நின்றுள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தலைமை மருத்துவர் பாலாஜி கொடைக்கானல் போலீஸ் நிலையத்திற்கு புகார் அளித்துள்ளார். இதற்குள் வடிவேல் அங்கிருந்து தப்பி உள்ளார்.

இதுகுறித்து விசாரணை செய்த கொடைக்கானல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பொன்குணசேகரன் வழக்கு பதிவு செய்து வடிவேலை கைது செய்யவும் நடவடிக்கை மேற்கொண்டுவருகிறார். #tamilnews
Tags:    

Similar News