செய்திகள்
பேரையூர் அருகே 16 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்- டிரைவர் கைது
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே 16 வயதுடைய சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி பலாத்காரம் செய்த டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
பேரையூர்:
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள குடிச்சேரி கிராமத்தை சேர்ந்த 16 வயதுடைய சிறுமி 11-ம் வகுப்பு வரை படித்து விட்டு பெற்றோருக்கு உதவியாக இருந்து வந்தார்.
அப்போது இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பிச்சைமணி மகன் பிரகாஷ் (22) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பிரகாஷ் கோவையில் பஸ் டிரைவராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு அந்த சிறுமி மாயமாகி பின்னர் வீடு திரும்பினார். இது தொடர்பாக சிறுமியின் தாய் திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
அதில், எனது மகளை கடத்தி சென்று ஆசைவார்த்தை கூறி பிரகாஷ் பாலியல் பலாத்காரம் செய்ததாக குறிப்பிட்டுள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பிரகாசை கைது செய்தனர்.
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள குடிச்சேரி கிராமத்தை சேர்ந்த 16 வயதுடைய சிறுமி 11-ம் வகுப்பு வரை படித்து விட்டு பெற்றோருக்கு உதவியாக இருந்து வந்தார்.
அப்போது இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பிச்சைமணி மகன் பிரகாஷ் (22) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பிரகாஷ் கோவையில் பஸ் டிரைவராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு அந்த சிறுமி மாயமாகி பின்னர் வீடு திரும்பினார். இது தொடர்பாக சிறுமியின் தாய் திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
அதில், எனது மகளை கடத்தி சென்று ஆசைவார்த்தை கூறி பிரகாஷ் பாலியல் பலாத்காரம் செய்ததாக குறிப்பிட்டுள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பிரகாசை கைது செய்தனர்.