செய்திகள்

டெம்போ வேன் மோதி தருமபுரி வெங்கடேஸ்வரா கல்லூரி மாணவர் பலி

Published On 2018-12-16 16:38 GMT   |   Update On 2018-12-16 16:38 GMT
பைக் மீது டெம்போ வேன் மோதி தருமபுரி வெங்கடேஸ்வரா கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி:

தருமபுரி, மாட்லாம்பட்டி, செங்குசெட்டிபட்டி பகுதியைச் சேர்ந்த  சின்னசாமி மகன் பிரசாந்த்(20), அதே பகுதியைச் சேர்ந்த மாது மகன் ராமநாதன்(20), வேடியப்பன் மகன் சந்தோஷ்(19). இவர்கள் தர்மபுரியில் உள்ள வெங்கடேஸ்வரா கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு படித்து வருகின்றனர்.

கடந்த 14-ம் தேதி மாலையில் இவர்கள் மூன்று பேரும் ஒரே பைக்கில் கிருஷ்ணகிரி அருகே நாயக்கன்கொட்டாய் அருகே சென்றுள்ளனர். அப்போது அவர்கள் சென்ற பைக் டெம்போ வேன் எதிர்பாரதவிதமாக மோதியது. இந்த விபத்தில் பைக்கில் இருந்த 3 பேரும் தூக்கி வீசப்பட்டு, பலத்த காயமடைந்தனர்.

அதனைப் பார்த்த அவ்வழியே சென்றவர்கள் அவர்களை மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் ராமநாதனுக்கு அதிக காயம் ஏற்பட்டதால், மேல்சிகிச்சைக்கு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ராமநாதன் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து, காவேரிபட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News