ராஜஸ்தான்-மத்திய பிரதேச முதல் மந்திரிகள் பதவி ஏற்பு விழாவில் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
சென்னை:
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்துள்ளது.
ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரியாக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரான அசோக்கெலாட், அதன் பொறுப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். ஏற்கனவே 2 முறை முதல் மந்திரியாக பதவி வகித்துள்ளார்.
அதேபோல் மத்திய பிரதேச மாநில முதல் மந்திரியாக கமல்நாத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் முதல்வர் அசோக்கெலாட் மற்றும் மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் ஆகியோர் பதவி ஏற்பு விழா நாளை நடக்கிறது. இருவரின் பதவி ஏற்பு விழாவிலும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.
இதற்காக மு.க.ஸ்டாலின் நாளை டெல்லி செல்கிறார். பின்னர் அங்கிருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் செல்கிறார். அங்கு ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்கிறார்.
பின்னர் மத்திய பிரதேச மாநிலம் போபால் செல்கிறார். அங்கு முதல் மந்திரி கமல்நாத் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்கிறார். #MKStalin