செய்திகள்
ஆறுமுகநேரியில் கல்லூரி மாணவி தற்கொலை
ஆறுமுகநேரியில் கல்லூரி மாணவி துக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக தற்கொலை செய்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி கணேச புரத்தை சேர்ந்தவர் கருப்பசாமி. ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவரது மகள் பால முருகேஷ்வரி (வயது 17). இவர் காயல்பட்டிணத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு வீட்டு மாடிப்பகுதியில் பால முருகேஷ்வரி தூக்குமாட்டிய நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் பாலமுருகேஷ்வரியை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவி எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.