செய்திகள்

திருச்சி விமான நிலையத்தில் ரூ.16 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

Published On 2018-12-13 07:21 GMT   |   Update On 2018-12-13 07:21 GMT
மலேசியாவில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.16 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Goldseized
திருச்சி:

திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டிற்கும், உள்நாட்டிற்கும் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு வெளிநாட்டில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் தங்கம் மற்றும் வெளிநாட்டு கரன்சி நோட்டுகள், அரிய வகை உயிரினங்களை கடத்தி வருகின்றனர்.

இவற்றை தடுக்க அதிகாரிகள் பல்வேறு வகையில் சோதனையில் ஈடுபடுகிறார்கள். அவ்வாறு பரிசோதனைகள் செய்தாலும் பயணிகள் தங்கத்தை கடத்தும் சம்பவங்கள் குறையவில்லை. தொடர்ந்து இந்த சம்பவங்கள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் திருச்சி விமான நிலையத்திற்கு மலேசியா தலைநகர் கோலாலம்பூரிலிருந்து ஏர் ஏசியா விமானம் நேற்று இரவு வந்தது. இதில் வந்த பயணிகளின் உடமைகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது மலேசியாவைச் சேர்ந்த கமலாம்பிகை என்பவர் உடலில் மறைத்து எடுத்து வந்த 20.700 கிராம் மதிப்புள்ள தங்கத்தினை அதிகாரிகள் நவீன ஸ்கேன் கருவி மூலம் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு இந்திய ரூபாயில் 15.87 லட்சமாகும். தங்கம் கடத்தி வந்த பெண்ணிடம் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. #Goldseized

Tags:    

Similar News