செய்திகள்
சறுக்கலை சரி செய்து 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றிபெறும் - தமிழிசை
5 மாநில தேர்தலில் ஏற்பட்ட சறுக்கலை சரி செய்து 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றிபெறும் என்று தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை கூறியுள்ளார். #Tamilisai #LokSabhaElection2019
சென்னை:
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம், தெலுங்கானா ஆகிய ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் பாஜக கடும் பின்னடைவை சந்தித்துள்ளது.
சத்தீஸ்கரில் பாஜக 33 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 43 சதவீத வாக்குகளை பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. ராஜஸ்தானில் பாஜக 38.8 சதவீத வாக்குகளும், காங்கிரஸ் 39.3 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளன. தெலுங்கானா (7 சதவீதம்) மற்றும் மிசோரம் (8 சதவீதம்) ஆகிய மாநிலங்களில் பாஜக மிக குறைந்த அளவிலேயே வாக்குகள் பெற்றுள்ளது.
இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை அளித்த பேட்டியின்போது கூறியதாவது:
5 மாநில தேர்தலில் ஏற்பட்ட சறுக்கலை சரி செய்து 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றிபெறும்.
மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் காங்கிரஸ் - பாஜக இடையேயான வாக்கு சதவீத வித்தியாசம் குறைவாகவே உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். #Tamilisai #LokSabhaElection2019
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம், தெலுங்கானா ஆகிய ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் பாஜக கடும் பின்னடைவை சந்தித்துள்ளது.
ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் ஆட்சியை இழந்த பாஜக, 230 தொகுதிகள் கொண்ட மத்திய பிரதேசத்தில் காங்கிரசைவிட 5 தொகுதிகள் மட்டுமே குறைவாக பெற்றுள்ளது.
சத்தீஸ்கரில் பாஜக 33 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 43 சதவீத வாக்குகளை பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. ராஜஸ்தானில் பாஜக 38.8 சதவீத வாக்குகளும், காங்கிரஸ் 39.3 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளன. தெலுங்கானா (7 சதவீதம்) மற்றும் மிசோரம் (8 சதவீதம்) ஆகிய மாநிலங்களில் பாஜக மிக குறைந்த அளவிலேயே வாக்குகள் பெற்றுள்ளது.
இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை அளித்த பேட்டியின்போது கூறியதாவது:
5 மாநில தேர்தலில் ஏற்பட்ட சறுக்கலை சரி செய்து 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றிபெறும்.
மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் காங்கிரஸ் - பாஜக இடையேயான வாக்கு சதவீத வித்தியாசம் குறைவாகவே உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். #Tamilisai #LokSabhaElection2019