செய்திகள்
சேலத்தில் மாயமான பள்ளி மாணவன் சென்னையில் மீட்பு
சேலத்தில் மாயமான பள்ளி மாணவன் ஆதி சென்னையில் மீட்கப்பட்டான். போலீசார் நடத்திய விசாரணையில் படிக்க விருப்பம் இல்லாமல் மாணவன் சென்னைக்கு சென்றது தெரிய வந்துள்ளது.
சேலம்:
சேலம் சுக்கம்பட்டி பகுதியை சேர்ந்தவர் செந்தில். இவரது மகன் ஆதி (வயது 14). இவர் சேலத்தில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று காலை வீட்டில் இருந்து பள்ளிக்கு செல்வதாக கூறி சென்ற ஆதி மாலையில் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடினர்.
பின்னர் பள்ளியில் வந்து விசாரித்தபோது அவர் பள்ளிக்கு செல்லாமல் மாயமானது தெரிய வந்தது. இது குறித்த புகாரின் பேரில் சேலம் மாநகர போலீசார் அவரை தேடி வந்தனர்.
இந்தநிலையில் சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்தில் பள்ளி மாணவர் ஒருவர் தனியாக சுற்றி திரிவதை பார்த்த சென்னை போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் சேலத்தில் மாயமான ஆதி என்பது தெரிய வந்தது.
அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்ற போலீசார் சேலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் மாணவரின் பெற்றோருக்கும் தகவல் கொடுத்தனர்.
இதற்கிடையே சேலம் போலீசார் நேற்றிரவு சென்னைக்கு புறப்பட்டு சென்றனர். மாணவனை இன்று சேலத்திற்கு அழைத்து வந்து அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கிறார்கள்.
போலீசார் நடத்திய விசாரணையில் படிக்க விருப்பம் இல்லாமல் மாணவன் சென்னைக்கு சென்றதாக கூறப்படுகிறது. வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேலம் சுக்கம்பட்டி பகுதியை சேர்ந்தவர் செந்தில். இவரது மகன் ஆதி (வயது 14). இவர் சேலத்தில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று காலை வீட்டில் இருந்து பள்ளிக்கு செல்வதாக கூறி சென்ற ஆதி மாலையில் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடினர்.
பின்னர் பள்ளியில் வந்து விசாரித்தபோது அவர் பள்ளிக்கு செல்லாமல் மாயமானது தெரிய வந்தது. இது குறித்த புகாரின் பேரில் சேலம் மாநகர போலீசார் அவரை தேடி வந்தனர்.
இந்தநிலையில் சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்தில் பள்ளி மாணவர் ஒருவர் தனியாக சுற்றி திரிவதை பார்த்த சென்னை போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் சேலத்தில் மாயமான ஆதி என்பது தெரிய வந்தது.
அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்ற போலீசார் சேலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் மாணவரின் பெற்றோருக்கும் தகவல் கொடுத்தனர்.
இதற்கிடையே சேலம் போலீசார் நேற்றிரவு சென்னைக்கு புறப்பட்டு சென்றனர். மாணவனை இன்று சேலத்திற்கு அழைத்து வந்து அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கிறார்கள்.
போலீசார் நடத்திய விசாரணையில் படிக்க விருப்பம் இல்லாமல் மாணவன் சென்னைக்கு சென்றதாக கூறப்படுகிறது. வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.