செய்திகள்

இரணியல் அருகே சந்தன மரம் வெட்டி கடத்திய 2 சிறுவர்கள் கைது

Published On 2018-12-08 15:08 GMT   |   Update On 2018-12-08 15:08 GMT
இரணியல் அருகே சந்தன மரம் வெட்டி கடத்திய 2 சிறுவர்களை போலீசார் கைது செய்து சிறுவர் சீர்திருத்த காப்பகத்தில் அடைத்தனர்.

இரணியல்:

இரணியலை அடுத்த நெய்யூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் சுனில்பிரகாஷ் (வயது 55). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியூர் சென்று இருந்தார். பின்னர் வீடு திரும்பிய போது வீட்டில் நின்ற 2 சந்தன மரங்களை மர்மநபர்கள் வெட்டிச் சென்றிருந்தனர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து இரணியல் போலீசில் புகார் செய்தார்.

போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் தனிப்படை களையும் அமைத்திருந்தனர். தனிப்படையினர் நேற்று கண்டன்விளை சந்திப்பில் ரோந்து வந்தனர். அப்போது அங்கு 2 சிறுவர்கள் சந்தேகப் படும்படியாக நின்று கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

அதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல்களை கூறினர். இதையடுத்து அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து விசாரணை நடத்தினர். அதில் வெள்ளிச்சந்தை பகுதியை சேர்ந்த 15 வயது மற்றும் 17 வயதுடைய சிறுவர்கள் என்பதும், அவர்கள் சுனில்பிரகாஷ் என்பவர் வீட்டில் சந்தன மரங்களை வெட்டியதும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து அந்த 2 சிறுவர்களையும் போலீசார் கைது செய்து பாளையங் கோட்டையில் உள்ள சிறுவர் சீர்திருத்த காப்பகத்தில் அடைத்தனர். அவர்களிடம் இருந்த சந்தன கட்டைகளையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News