செய்திகள்

தேனி அருகே நடந்து சென்ற பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு

Published On 2018-12-08 13:30 GMT   |   Update On 2018-12-08 13:30 GMT
தேனி அருகே தனியாக நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறித்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தேனி:

தேனி பாரஸ்ட் ரோடு 8-வது வார்டு பகுதியை சேர்ந்தவர் பாண்டியராஜன். இவரது மனைவி தனலட்சுமி (வயது33). இவர் சம்பவத்தன்று இரவு பாரஸ்ட் ரோடு பகுதியில் ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க சென்றார்.

மீண்டும் திரும்பி வந்துகொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த 2 வாலிபர்கள் கண் இமைக்கும் நேரத்தில் அவர் கழுத்தில் இருந்த 5 பவுன் நகையை பறித்துக்கொண்டு ஓடினர். தனலட்சுமி சத்தம்போட்டதும் அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். இருந்தபோதும் கொள்ளையர்களை பிடிக்க முடியவில்லை.

இது குறித்து தேனி போலீஸ் நிலையத்தில் தனலட்சுமி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். பகல் நேரங்களில் நடந்து வந்த வழிப்பறி சம்பவம் தற்போது இரவு நேரங்களிலும் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News