செய்திகள்

செவ்வாப்பேட்டையில் தாய்-மகளிடம் நகை பறிப்பு

Published On 2018-12-07 07:42 GMT   |   Update On 2018-12-07 07:42 GMT
செவ்வாப்பேட்டை சி.டி.எச். சாலையில் நடந்துசென்று கொண்டிருந்த தாய் மற்றும் மகளிடம் நகையை பறித்துச் சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செவ்வாப்பேட்டை:

செவ்வாப்பேட்டை எப்.சி.ஐ. காலனியை சேர்ந்தவர் பிரேமா. இவருடைய மகள் வரலட்சுமி, மருத்துவ கல்லூரி உதவி பேராசிரியர்.

இன்று காலை வரலட்சுமி பஸ் ஏறுவதற்காக செவ்வாப்பேட்டை சி.டி.எச். சாலையில் நடந்துசென்று கொண்டிருந்தார். இவருடைய தாயார் பிரேமாவும் உடன் சென்றார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 பேர் பிரேமா அணிந்திருந்த ஒரு பவுன் தங்கசங்கிலி, அவருடைய தாய் அணிந்திருந்த 6 பவுன் தங்க சங்கிலி ஆகியவற்றை பறித்து தப்பி சென்றுவிட்டனர்.

செவ்வாப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் வழிப்பறி நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்.
Tags:    

Similar News