செய்திகள்

அரூர் அருகே கல்லூரி மாணவர் மாயம்

Published On 2018-12-05 12:50 GMT   |   Update On 2018-12-05 12:50 GMT
அரூர் அருகே கல்லூரி மாணவர் மாயமானது குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தருமபுரி:

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள கோட்டப்பட்டி அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் ஹரிதாஸ். இவரது மகன் வேடன் (வயது 23). இவர் அரூரில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் படித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று கல்லூரிக்கு சென்று வருவதாக கூறிவிட்டு வீட்டை சென்ற அவர் பின்னர் மீண்டும் வீடு திரும்பி வரவில்லை. 
உடனே பதறிபோன அவரது பெற்றோர் பல இடங்களில் வேடனை தேடிபார்த்தனர். எங்கும் தேடியும் அவர் கிடைக்காததால் மாயமானது தெரியவந்தது. 

இந்த சம்பவம் குறித்து அண்ணன் கிளிண்டன் என்பவர் அரூர் போலீசாரிடம் புகார் தெரிவித்ததார். புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News