செய்திகள்

தஞ்சையில் பெண் போலீசிடம் 4 பவுன் செயின் பறிப்பு- மர்ம கும்பல் கைவரிசை

Published On 2018-12-04 17:25 GMT   |   Update On 2018-12-04 17:25 GMT
தஞ்சையில் பெண் போலீசிடம் 4 பவுன் நகையை பறித்து சென்ற 3 மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆலந்தூரை சேர்ந்தவர் சண்முகநாதன். இவரது மனைவி புவனேஸ்வரி (வயது 35).

இவர் தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள போலீஸ் குடியிருப்பில் தங்கியிருந்து வல்லம் டி.எஸ்.பி அலுவலகத்தில் போலீஸ் ஏட்டாக பணி புரிந்து வருகிறார். இந்தநிலையில் புவனேஸ்வரி நேற்று பணியை முடித்து விட்டு இரவு 10 மணிக்கு தஞ்சை மேலவஸ்தா சாவடி ரவுண் டானாவில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவரது பின்னால் ஒரு மோட்டார் சைக்கிளில் முகத்தில் துணியை கட்டி கொண்டு மெதுவாக 3 நபர்கள் திடீரென புவனேஸ்வரி கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்க செயினை பறித்து சென்றனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த புவனேஸ்வரி சத்தம் போட்டார். ஆனால் ஆட்கள் வருவதற்குள் மர்ம நபர்கள் தப்பி சென்று விட்டனர்.

இதுகுறித்து புவனேஸ்வரி தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழக போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பெண் போலீசிடம் 4 பவுன் நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். #tamilnews
Tags:    

Similar News