செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் உயர்வு

Published On 2018-12-01 04:37 GMT   |   Update On 2018-12-01 04:37 GMT
நேற்று 103.54 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 103.63 அடியானது. இனி வரும் நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது. #Metturdam
மேட்டூர்:

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் கடந்த ஜூன் மாதம் முதல் மேட்டூர் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

நேற்று 5 ஆயிரத்து 134 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 4 ஆயிரத்து 347 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாய் பாசனத்திற்கு 750 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.

அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

நேற்று 103.54 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 103.63 அடியானது. இனி வரும் நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது. #Metturdam

Tags:    

Similar News