செய்திகள்

புளியங்குடி பகுதிகளில் நாளை மின்தடை

Published On 2018-11-30 16:30 GMT   |   Update On 2018-11-30 16:30 GMT
புளியங்குடி பகுதிகளில் நாளை பராமரிப்பு பணி நடைபெறுவதால் காலை 9 மணி முதல் 1 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
கடையநல்லூர்:

கடையநல்லூர் கோட்டத்திற்கு உட்பட்ட புளியங்குடி மற்றும் வீரசிகாமணி துணை மின் நிலையங்களில் நாளை (1-ந் தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அங்கிருந்து மின்விநியோகம் பெறும் புளியங்குடி, சிந்தாமணி, அய்யாபுரம், ராஜகோபாலபேரி, ரத்தினபுரி, இந்திராநகர், புன்னையாபுரம், காடுவெட்டி, சிங்கிலிபட்டி, சங்கனாபேரி, சிதம்பரபேரி சுந்தரேசபுரம், திருவேட்ட நல்லூர், திரிகூடபுரம், சொக்கம்பட்டி மற்றும் மேல புளியங்குடி, வீரசிகாமணி,  பட்டாடை கட்டி, 

அருணாசலபுரம், அரியநாயகிபுரம், பாம்புக் கோவில், வெண்டிலிங்கபுரம், திருமலாபுரம், வட நத்தம்பட்டி, சேர்ந்தமரம் , நடுவக்குறிச்சி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் 1 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

இத்தகவலை  செயற் பொறியாளர் நாகராஜன் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News