செய்திகள்
தருமபுரியில் 2 பேர் மாயம்- போலீசார் விசாரணை
தருமபுரியில் 2 பேர் மாயமானது குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் வழக்குபதிவு செய்து தேடி வருகிறார்கள்.
தருமபுரி:
வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் தில்லைநகர் பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி. இவரது மகன் தரணிகுமார் (வயது13). இவர் தருமபுரி மாவட்டம், இருமத்தூரில் உள்ள மாணவர்கள் விடுதியில் தங்கி அங்குள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த 28-ந்தேதி அன்று தரணிகுமார் விடுதியில் இருந்து பள்ளிக்கு புறப்பட்டு சென்றார். பின்னர் மாலையில் விடுதிக்கு திரும்பவில்லை. இது குறித்து பள்ளி தாளாளர் கம்பைநல்லூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான பள்ளி மாணவன் தரணி குமாரை தேடி வருகின்றனர்.
இதேபோல் இண்டூர் அடுத்துள்ள பரப்பட்டி பகுதியை சேர்ந்த ராஜு (75). நேற்று வீட்டில் தூங்கி கொண்டிருந்த இவர் திடீரென மாயமாகி விட்டார். இது குறித்து அவரது மகன் ராஜ்குமார் இண்டூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான ராஜுவை தேடி வருகின்றனர்.