செய்திகள்

தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் காலமானார்

Published On 2018-11-26 03:33 GMT   |   Update On 2018-11-26 03:33 GMT
புகழ்பெற்ற தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் சென்னையில் இன்று அவரது இல்லத்தில் காலமானார். #IravathamMahadevan
சென்னை:

சென்னையில் ஆதம்பாக்கத்தில் வசித்து வந்தவர் புகழ் பெற்ற தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் (வயது 88). கல்வெட்டுக்கள் தொடர்பாக பல்வேறு ஆய்வுகள் மேற்கொண்டுள்ளார். சிந்துவெளி ஆய்வு குறித்த இவரது கட்டுரை மிகுந்த பாராட்டை பெற்றது. 2009ம் ஆண்டு மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது இவருக்கு வழங்கப்பட்டது.

கடந்த சில மாதங்களாக முதுமை சார்ந்த உடல்நல பாதிப்பால் அவதிப்பட்டு வந்த ஐராவதம் மகாதேவன் இன்று அதிகாலை தனது இல்லத்தில் காலமானார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது.

திருச்சி மண்ணச்சநல்லூரை சேர்ந்த இவர்  கடந்த 1987 முதல் 1991 வரை தினமணி பத்திரிகையின் ஆசிரியராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. #IravathamMahadevan
Tags:    

Similar News