செய்திகள்
மதுரை அருகே பேக்கரி கடைக்காரரிடம் பணம் கேட்டு மிரட்டியவர் கைது
மதுரை அருகே பேக்கரி கடைக்காரரிடம் பணம் கேட்டு மிரட்டியவர் கைது செய்யப்பட்டார்.
மதுரை:
மதுரை எஸ்.எஸ்.காலனி பொன்மேனி முத்துராம லிங்கத்தேவர் தெருவைச் சேர்ந்தவர் சேவுகமூர்த்தி (வயது46). அதே பகுதியில் பேக்கரி நடத்தி வருகிறார்.
சம்பவத்தன்று இரவு 7 மணி அளவில் பொன்மேனி காந்திஜி தெருவைச் சேர்ந்த மூவேந்திரன் (54) என்பவர் அங்கு வந்தார். அவர் திடீரென்று சேவுகமூர்த்தியிடம் பேக்கரியில் நீ வைத்திருக்கும் பணத்தை என்னிடம் கொடு என்று மிரட்டினார்.
பணம் தர முடியாது என சேவுகமூர்த்தி கூறவே மூவேந்திரன் ஆத்திரமடைந்து அவரை அடிக்கப் பாய்ந்தார்.
இதுகுறித்து சேவுகமூர்த்தி எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மூவேந்திரனை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.