செய்திகள்

பரமத்திவேலூர் அருகே கார் மோதி கூலி தொழிலாளி பலி

Published On 2018-11-22 11:43 GMT   |   Update On 2018-11-22 11:43 GMT
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே கார் மோதிய விபத்தில் கூலி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி தாலுகா படமுடி பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனியப்பன்(வயது56), கூலி தொழிலாளி. இவர் நேற்று வேலையை முடித்துவிட்டு மாலையில் கரூர்-நாமக்கல் பை-பாஸ் சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த கார் எதிர்பாராத விதமாக பழனிசாமி மீது மோதியது. இதில் அவர் பலத்த காயமடைந்து கீழே விழுந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பழனிசாமியை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினார்.

இது குறித்து பரமத்திவேலூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணகுமார் வழக்கு பதிவு செய்து கார் ஓட்டி வந்த நாமக்கல் நகராட்சி டிரைவர் கருணாநிதி மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News